Saturday, September 18

1:42 PM
38


உறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படை  காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர். 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தை பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொண்டு உறவுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைபோல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாக பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாக தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பை போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவையே கெடுத்து விடுகிறது. தன்னை பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னை தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும் 

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துகொள்ளாமை தான் காரணமாக இருக்கும்.  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.

*   அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நல  குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

*    "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவை தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தை சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை மறுப்பவர்  புரிந்து கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவு செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்து போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சி கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

எந்த விதத்தில் எல்லாம்  கணவனும்  , மனைவியும் தங்களது நெருக்கத்தை அதிகரித்து கொள்ளலாம் என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

தாம்பத்தியம் தொடர் தொடரும்.....

Tweet

38 comments:

  1. மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதி.. மிக எளிமையாக தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நல்ல தகவல்களை சேகரித்து பலபேருக்கு உபயோகமான தகவல்..

    ReplyDelete
  3. "ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள்."

    சரியா சொன்னிங்க தோழி ..எல்லோரும் படிச்சு பயன் படற நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி ..அடுத்த பாகத்துக்கு ஆவலோட.

    ReplyDelete
  4. ஆண் பெண் என இரு பாலரும் படித்து படிக்க வேண்டிய அவசியமான பதிவு...

    ReplyDelete
  5. ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் சரியான தகவலக்ளை சொல்றீங்க தோழி! இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும். நன்றி!

    ReplyDelete
  6. LK...

    புரிதலுக்கு மகிழ்கிறேன்.

    ReplyDelete
  7. சசிகுமார் said...

    //நன்றி அக்கா//

    o.k sasi.

    :))

    ReplyDelete
  8. raja said...

    //மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதி.. மிக எளிமையாக தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.//

    உண்மைதான் மிக சிக்கலான விஷயம் தான்...அதுதான் எழுத அதிக நேரம் எடுக்க வேண்டி இருக்கிறது. உங்களின் புரிதலுக்கு நன்றி

    :)

    ReplyDelete
  9. சௌந்தர் said...

    நன்றி.

    ReplyDelete
  10. sandhya...

    //சரியா சொன்னிங்க தோழி ..எல்லோரும் படிச்சு பயன் படற நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி ..அடுத்த பாகத்துக்கு ஆவலோட.//

    நன்றி தோழி. அடுத்த பாகம் உங்களின் ஆதரவோடு விரைவில்.

    ReplyDelete
  11. வெறும்பய said...

    //ஆண் பெண் என இரு பாலரும் படித்து படிக்க வேண்டிய அவசியமான பதிவு...//

    உண்மைதான் சகோ.

    ReplyDelete
  12. பல நல்ல தகவல்கள்..அதுவும் புரிவதற்கு எளிதாக...

    ReplyDelete
  13. என்னது நானு யாரா? said...

    //ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் சரியான தகவலக்ளை சொல்றீங்க தோழி! இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும். நன்றி!//

    இப்படி எதையும் நாம வெளிபடையாக பேசாமல் இருப்பதால் தான் நம்மிடையே சரியான விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. இந்த விஷயம் பேச ஆண் , பெண் என்ற பேதம் எதுக்கு. ?? பெண்ணை சார்ந்தது தானே இந்த விசயமே....?!

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. புன்னகை தேசம். said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. சிக்கலான பல விஷயங்களை வாழ்வில் எப்படி அணுகுவது என்று, இந்த தொடரை படித்தாலே, கண்டிப்பாக தெளியலாம்...

    ரொம்ப விரிவா, அழகான எழுத்து நடையில் எழுதறது ரொம்ப நல்லா இருக்கு...

    தொடருங்கள்....

    என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அலைகள் பாலா said...

    //அவசியமான பதிவு//

    ஆமாம் உண்மைதான். வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  17. அன்பரசன் said...

    //அருமையான அலசல்.//

    உங்களின் வருகைக்கு நன்றிங்க.

    :))

    ReplyDelete
  18. R.Gopi said...

    ///சிக்கலான பல விஷயங்களை வாழ்வில் எப்படி அணுகுவது என்று, இந்த தொடரை படித்தாலே, கண்டிப்பாக தெளியலாம்...

    ரொம்ப விரிவா, அழகான எழுத்து நடையில் எழுதறது ரொம்ப நல்லா இருக்கு..///


    உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. தாம்பத்திய உறவை அற்புதமாக எழுதி கொண்டு வருகிறர்கள்
    தற்போதிய வாழ்கைக்கு அவசியமான பதிவு
    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  21. good post..

    http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

    ReplyDelete
  22. நல்ல அலசல்
    நன்றி

    ReplyDelete
  23. கௌஸ், நல்லா இருக்கு. தொடருங்க..

    ReplyDelete
  24. சே.குமார் said...

    கொஞ்சம் சிக்கலான விஷயம் தான் புரிந்து கொள்ளவில்லை என்றால்....

    புரிந்து, தெரிந்து, தெளிந்து கொண்டவர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான்.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  25. S Maharajan said...

    நன்றி நண்பரே. எப்ப ஊர் பக்கம் வரீங்க ??

    ReplyDelete
  26. பிரியமுடன் பிரபு said...

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  27. vanathy said...

    ரொம்ப நன்றி தோழி.

    ReplyDelete
  28. சில விஷயங்களை புரிந்து கொண்டேன், நன்றி.

    ReplyDelete
  29. இரவு வானம் said...

    //சில விஷயங்களை புரிந்து கொண்டேன், நன்றி.//

    உங்களின் புரிதலுக்கும் , வருகைக்கும் நன்றிங்க

    ReplyDelete
  30. திருமண உறவில் ஏற்படும் பிரச்சி​னைக​ளை உளவியல் ரீதியில் அனுகும்மு​றை சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  31. i am a diabitic. i got after marriage means last 10 years. When i was in healthy, i called so many times for sex. my wife refused to come. now i am totally unfit. she shows interest

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...