காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 13

உறங்காத இரவு


                          
                      
                         மற்றுமொரு தூங்காத இரவு
                      
                         உன்னால்.... நீயோ நித்திரையில்...!
                      
                         என்ன பிழை கண்டாய் என்னில்...?
                      
                         நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
                      
                         தோன்றுமே கவிதையாய்...,
                      
                         நீ எழுதும்போது என் பெயரும்
                      
                         கூட  அழகுதான் , வியந்திருக்கிறேன்
                      
                         பலமுறை....! உனக்கு அப்படி
                      
                         தோன்றாதது விந்தையே..?!
                      
                         ஒத்துகொள் இன்றே, நான்
                      
                         உன்னில் கொண்டிருக்கும் அன்பே
                      
                         பெரிதென்று...! மன்னித்து
                      
                        விட்டு விடுகிறேன் உன்னை...!!

                                                                                                       



புதன், மார்ச் 17

காதல் கவிதைகள்



       " எத்தனை சோதனைகள்
         என் காதல் மீது 
         மனதை கேட்டுபார் 
         உன் உயிர் சொல்லும் 
         நான் உன் மீது கொண்ட 
         காதலை, நம்பிக்கையை "

     "  மௌனமாய் இருக்க 
         மனதும் இடம் 
         கொடுக்கவில்லை, 
         விடை பெற பாதையும்
         தெரியவில்லை. 
         என்னை சித்திரவதை 
         செய்வதை விட, உன்
         கையால் கொன்றுவிடு  "

      "   நேரில் நீ வரும்போது பேச
          பல நினைத்து ஒத்திகை பார்த்து 
          காத்திருப்பேன்,  கடைசியில் ஒரு
          வார்த்தையும் பேசாமல் அந்த நாள் 
          முடிந்து போகும்!,  
          கேள்விகள் கேட்க மறந்து 
          பேசாமல் உன்னை அணைத்து கொண்டு 
          மெய் மறந்து மடியில் கிடப்பேன்!!  "

       "  என் மனதில்  இன்னும் மாறாமல் இருக்கிறது,   
                   நாம் சேர்ந்து வாழ்ந்த இனிய நாட்கள் !
          கொஞ்சி பேசி மகிழ்ந்த நேரங்கள்!
                   செல்லமாய் சண்டை போட்ட நிமிடங்கள்!
          கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்! 
                   மறுபடி சமாதானத்தில் ஒன்று கலந்த உணர்வுகள்!
          பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்! 
                    கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்! 
          பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்! 
                    எதுவுமே மாறவில்லை மறைவில்லை, 
          ஆனால் நீ மாறிவிட்டாய், மறைந்து விட்டாய்??. 

                                                                                                         இன்னும்   தொடரும்......