எழுத தூண்டிய பெண்கள்:
நான் இந்த தலைப்பை தேர்ந்துஎடுக்க இரண்டு பெண்கள் தான் காரணம், அவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் இதை எழுதவே தொடங்கினேன். அவர்கள் இருவரும் எனது சிறிய அளவு COUNSELLING மூலமாக தங்களது வாழ்வை திரும்ப மீட்டெடுத்தவர்கள். இப்போது இடையில் வந்த புது உறவை மறந்து சந்தோசமாக இருக்கிறார்கள்.
கவுன்செலிங் :
ஒருவேளை மனதளவில் சிறிது தடுமாற்றம் இருந்தாலோ , அல்லது கவுன்செல்லிங் தேவைப்படும் நிலையில் என் தோழிகள் இருந்தால் தயங்காமல் எனது இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக காத்திருக்கிறேன். மேலும் உங்களது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
வெளிவரமுடியாத ஒரு நிலை:
சிலரின் விசயத்தில் இந்த உறவில் இருந்து வெளியில் வர முடியாத ஒரு நிலை ஏற்படும்
எப்போது என்றால் அந்த ஆண் அல்லது பெண் ஒருவர்மீது ஒருவர் முறையான கணவன் மனைவி மாதிரி பாசமாகவும், அன்பாகவும், விட்டு கொடுத்து வாழ்ந்தும், ஒருவர் மற்றவருக்காக உயிரை விட கூட தயாராக இருப்பார்கள். இவர்கள் விசயத்தில் மாற்றம் என்பது உடனே வராது ஆனால் இரண்டு குடும்பங்களின் சூழ்நிலைகாகவும், குழந்தைகளுக்காகவும், மனசாட்சிகாகவும் விடுபட நினைத்தால் கண்டிப்பாக முடியும் .
அதே நேரம் மனம், உடல் இரண்டும் சேர்ந்து மாறவேண்டும். இதற்கும் ஒரு நல்ல தீர்வை என்னால் கொடுக்கமுடியும். ஆனால் இதை விளக்கமாக பதிவில் எழுத இயலாது மெயில் மூலமாக கேட்பவர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன்.
பெண் ஒரு மாபெரும் சக்தி:
பெண் ஒரு சக்தி, அந்த சக்திஐ ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கு பயன்படுதிவிடகூடாது. இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை. பலரும் ஒத்து கொண்ட உண்மை. பெண்களின் திறமைக்கும், தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் எவ்வளவோ சாதிக்கமுடியும்.
அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேண்டாத உறவில் ஈடுபட்டு காலம் முழுவதும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்வதை விட, கிடைத்த வாழ்க்கையை மேன்மை படுத்தி நம்மை மற்றவர்கள் பெருமையாக பார்க்கும்படி, புகழும்படி வாழ்ந்து முடிக்க வேண்டும். இந்த உறவை பாவம் என்று சொல்லும் அதே நேரத்தில் இந்த பாவம் நம் பிள்ளைகளை போய் சேரும் என்பதை தாய்மை உள்ளம் படைத்த நாம் மறக்ககூடாது.
எச்சரிக்கை :
மேலும் சிலர் சொல்லலாம் , " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, என் சந்தோசம் தான் முக்கியம் என்று " , அந்த மாதிரி ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் என்னால் கொடுக்கமுடியும்.
நவீன தொழில் நுட்பத்தில் வந்த கேமரா போன், இப்போது பெண்களை என்ன பாடுபடுத்தி கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்வதை விட மீடியாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும். இனி சிம்கார்ட் அளவிற்கு மைக்ரோ ரெகார்டிங் சிப் வரபோகிரதாம்.
செல்போனில் பேசுவதை கூட ரொம்ப யோசித்து பேசவேண்டிய காலநிலையில் இருக்கிறோம். எல்லோருமே நல்லவர்கள்தான் பணத்தேவை, மற்றும் இதர தேவைகள் இல்லாதவரை. உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியம் வெளியேறிவிடும். பிறகு பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் கதைதான். எதற்கு வம்பு உங்களை நீங்களே சந்தோஷ படுத்திக்கொள்ள முடியும், அப்படி இருக்கும் போது மூன்றாம் நபர் எதற்கு?
" பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை, இந்த உறவால் நான் திருப்தியாக இருக்கிறேன்" என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் கள்ளகாதல் தவறில்லை, ஆனால் மற்றவர்களுக்கு?!