வேண்டுகோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேண்டுகோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 22

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது.  அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.

* * * * * * * * *




அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால்   நடக்கிறது . 


Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.


முகப்பு விளக்குகள் 

இதில்  இரவில்  நடக்கும்  விபத்துக்கள்  மிக  அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...

முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???

"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?

பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 

National Automotive Testing and R AND D Infrastructure Project.    
Ministry of Road Transport & Highways. 
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009. 
Transport Secretaries OF Government of Tamil Nadu . 

இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.

அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.


இந்திய அரசாங்கம்:-

* National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in

* Transport Secretaries of Government of Tamil Nadu:-transec@tn.gov.in



அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...

நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.


மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...

நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.

மின்னஞ்சல் பார்மேட்

Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".






திங்கள், ஆகஸ்ட் 23

நண்பர்களே ஒரு உதவி...!



இதை இந்த பதிவில்  படித்தேன். 



பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..


பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.


பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....


அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:


தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434 
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

 பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...


இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..


இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்.எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...


செய்வீர்களா நண்பர்களே.!!!!

ஞாயிறு, மே 2

வேண்டுகோள்

 " நீண்ட பயணம் போகவேண்டும் என்று முடிவு  செய்த பின்னர்,
எந்த வழியாக   என்று பாதையை  தேடினேன்.....!
இப்போது பாதையையும் 
கண்டுகொண்டேன்!    ஆனால்
காலநிலை ஏற்றதாக  இல்லை,
பயணத்தை மட்டும் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டேன்...........! "  


( கவிதை இல்லைங்க!!)


பதிவுலக நண்பர்களுக்கு எனது சிறிய வேண்டுகோள் :


முதலில் எனது இடுகையை பாராட்டி நீங்கள் தொடர்ந்து அனுப்பிய ஈமெயில் மடல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  குறிப்பாக தாம்பத்தியம் பகுதி 2   வர ஏன் இந்த தாமதம் என்று என்னை அன்பாக கோபித்த அன்பு இதயங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .  தனி தனியாக உங்கள் அனைவருக்கும் மடல் எழுத இயலாததால்,  எல்லோருக்கும்  சேர்த்து இந்த சிறிய விளக்கம் கொடுப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


கோடைகாலம் என்னை system   பக்கமே போக விடுவது இல்லை, காரணம் வெயில் இல்லைங்க, என் இரண்டு பசங்கதான்!    டிவி தேமே என்று இருக்க கம்ப்யூட்டர் தான் அவர்களது முழு நேர பொழுதுபோக்காக இருக்கிறது. மின்சாரதுறையின் புண்ணியத்தில் பகலில்  மூணு மணி நேரம் மட்டும்தான் அதற்கு ரெஸ்ட்.


கொஞ்சம் இரவல் வாங்கித்தான் இதை எழுதுகிறேன். (தண்டமாக 200 ரூபாய்க்கு ஐஸ்கிரீம்  அழுதிருக்கேன்)   


உங்களிடம் பகிர்ந்துகொள்ள முக்கிய இடுகைகளை மனதில் பூட்டி வைத்துள்ளேன்.   கொஞ்சம் மெதுவாக வெளியிடுகிறேன், தாமதத்திற்கு பொறுத்துகொள்ளவும்.  தொடர்ந்து ஆதரவு கொடுங்கள், காத்திருக்கிறாள் உங்கள் அன்பு தோழி 
அருவியாக கொட்ட!!