ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 9

உயிர் போகும் வாழ்க்கை

உளவாளி 


இந்திய நாட்டில் பிறந்ததிற்காக நாம் பெருமை படும் அதே நேரம் சில நிதர்சனங்களை பார்க்கும் போது வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படி வருத்தப்படகூடிய ஒன்றை பற்றியது  தான் இந்த பதிவு.  நம் நாட்டை பாதுகாக்கவும்,  எதிரிகளின் செயல்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும்  உளவாளிகளை பயன் படுத்துவார்கள்.  இவர்கள் எதிரியின் இருப்பிடத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் செயல்களை கண்காணித்து தகவல் சொல்லவேண்டும்.

ஆனால் இது ஒன்றும் சாதாரண வாழ்க்கை இல்லை உயிரை பணயம் வைத்து பல சவால்களை சமாளிக்க வேண்டும். இவர்கள்  தைரியம் , புத்தி சாதூரியம் , தன்னம்பிக்கை,   மனோதிடம்  , திறமை ஆகியவற்றை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.  அனைத்தையும் விட தாய் நாட்டின் மேல் வெறி கொண்ட பக்தி உடையவர்களாக இருக்க  வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன்தான் ரவீந்திர கௌசிக் என்பவர்,  2002 இல் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அகமது  என்ற பெயரில் இறந்து போனவர் இவர் தான்.   இந்தியாவுக்காக பாகிஸ்தானில் இருந்து உளவு பார்த்த ஒரு உளவாளி.  அவரின் வாழ்க்கை பல சிக்கல்கள், சவால்கள் நிறைந்த ஒரு திகில் வாழ்க்கை.  இவரது வாழ்க்கையை கிருஷ்ணாதர் என்ற ஒரு எழுத்தாளர் 'மிஷன் டு பாகிஸ்தான்' என்ற பெயரில் எழுதி வெளி இட்டார். ஆனால் நூலின் எந்த இடத்திலும் கௌசிக் பெயரை குறிப்பிட வில்லை. நீண்ட மௌனத்துக்கு பின் இப்போதுதான் அவரது பெயரை கூறியுள்ளார்.

இந்த உளவாளி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்கா என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர்தான், நன்கு  படித்தவர். 1971 ம் ஆண்டில் இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோது தேசபக்தியை வலியுறுத்தி கௌசிக் சில நாடகங்களை நடத்தினார். அவர் நடத்திய ஒரு நாடகம்தான் அவரது தலை எழுத்தையே மாற்றியது.  உயிரே போனாலும் தாய்நாட்டை காட்டி கொடுக்காத உளவாளி வேடம் ஒன்றிலும் நடித்து இருந்ததை பார்த்த ராணுவ  அதிகாரிகள் கௌசிக்கை அழைத்து பேசினார்கள். இதே போன்று உளவாளியாக நம் நாட்டிற்காக வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். இயல்பிலேயே நாட்டுபற்று அதிகம் கொண்ட கௌசிக் உடனடியாக ஒத்து கொண்டார்.

பின்னர் டெல்லி, அபுதாபி, துபாய் என்று சுற்றி திரிந்தார். தனது பெயரையும் நபி அகமது என்று மாற்றி கொண்டு, ஒரு பாகிஸ்தான் பெண்ணையும்  மணந்து முழு பாகிஸ்தானியாக மாறினார். .  பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கு பல முக்கிய தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் எல்லை பாதுகாப்பில் பணி புரிந்தாலும் அவரது கவனம் முழுவதும் நம் நாட்டின் மீதே இருந்து இருக்கிறது.  இந்த சூழ்நிலையில் இவரிடம்  இன்னொரு உளவாளியை பாகிஸ்தானை விட்டு பத்திரமாக அனுப்ப  வேண்டும் என்ற வேலையை இந்திய ராணுவம் கொடுத்தது.  அதன்படி தப்பிக்க வைக்கும் போது அந்த உளவாளி பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார்.  அவர்களின் சித்திரவதையை தாங்க முடியாத அந்த உளவாளி கௌசிக்கை  பற்றியும்  சொல்லிவிட்டார். அவ்வளவுதான் இவரையும் பிடித்து பாகிஸ்தானில் உள்ள முல்தான் சிறையில் அடைத்துவிட்டார்கள்.


சுமார் 18 ஆண்டுகள் அந்த சிறையில் தொடர் சித்திரவதைக்கு அவரை உட்படுத்தினார்கள் . அவர் உடலில் உயிர் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் . இதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் இந்தியா அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.....??  கடைசி காலத்தில் தனது தாய்க்கு கௌசிக் எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஒரு வரி தான் ( என்னை தலை குனிய வைத்தது )

" இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால்,  மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் " .  இப்படி மனம் நொந்து கடிதம் எழுதிய அடுத்த மூணு நாட்களில் கௌசிக் இறந்தே போனார்.

நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒரு உளவாளியின் வாழ்க்கை இறுதியில் சிறையின் இருட்டு அறையில் முடிவுக்கு வந்து விட்டது.  இவரின் இந்த வாழ்க்கை அனுபவத்தை  அந்த எழுத்தாளர் எழுத வில்லை என்றால் நமக்கும் தெரிய வாய்ப்பு இல்லைதான்.  இன்றும்  இவரை மாதிரி எத்தனை பேர்,  எங்கே எல்லாம், எந்த நிலையில் எப்படி இருக்கிறார்களோ ???