ரோஜாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோஜாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 6

தொட்டியில் ரோஜாக்கள் பகுதி 3

உரம் இடும் முறைகள்:


உரம் என்று சொல்லும்போது பெரிய அளவிற்கு ஒன்றும் இல்லை எல்லாம் நம் வீட்டில் கிடைக்கும் பொருள்கள் தான் காய்கறி, சிக்கன், மீன், மட்டன் இவைகளை கழுவிய தண்ணீரை ஊற்ற வேண்டும் அவற்றின் கழிவுகளை செடி ஐ சுற்றி உள்ள மண்ணை தோண்டி புதைத்து வைக்கலாம் . முடிந்தால் ஆட்டின் ரத்தம் ஒரு ஸ்பூன் கூட வேரில் ஊற்றலாம். டீதூள் வேஸ்ட், உடைத்த வேப்பங்கொட்டை தூள் இவற்றையும் போடலாம். மண்புழு உரத்தை நீங்களே தயார் செய்து போடலாம். இதன் தயாரிப்பு முறையை எனது மண்புழு உரம் தயாரிப்பு என்ற தலைப்பில் பாருங்கள். 

பிறகு செடி ஐ trim பண்ணி விடவேண்டும் அதாவது நன்கு வளர்ந்த பின்னர் முற்றிய கிளைகளை கொஞ்சம் அளவு விட்டு கட் பண்ணியும், பழுத்த இலைகளை கிள்ளியும் விடவும் . எல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி மண்ணை அடிமேல் கிளறி விடுங்கள் போதும். மாதிரி சின்ன சின்ன வேலைகள் செய்தாலே போதும். அதிக அளவில் பூக்களையும், அளவில் பெரிய பூக்களையும் நம் வீட்டில் பார்க்க முடியும். முக்கியமாக இந்த குறிப்புகள் அனைத்தும் என் அனுபவமே. எங்கள் வீட்டில் 12 வருடத்திற்கும் மேலாக ரோஜா செடிகளை வளர்த்து எங்கள் ஏரியாவின் அடையாளமாக எங்கள் பூக்கள் உள்ளன. புதிதாக செடி முறைகள் வளர்க்கும் ஆசை மட்டும் இன்னும் என்னை விட்டு போகவில்லை. வளர்த்து பாருங்கள் அப்புறம் நீங்களும் ரோஜாவை love பண்ண தொடங்கிவிடுவீர்கள்.


:

வெள்ளி, மார்ச் 5

தொட்டியில் ரோஜாக்கள் பகுதி 2

வளரும்போது கவனிக்கவேண்டியவை:

இனி தான் முக்கியமான விசயமே உள்ளது, இப்போது நான் சொல்லபோவதை பண்ணுவதுற்கு யாருக்கும் மனம் வராது. ஆனால் பின்னால் கிடைக்கும் பலனை பார்த்து கண்டிப்பாக என்னை பாராட்டுவிர்கள். என்ன over ஆ buitup பண்றேனா? விஷயம் இதுதாங்க ஆரம்பத்தில் வரும் மொட்டுக்களை பூக்க விடக்கூடாது அதாவது மொட்டுகளை கிள்ளி விடவேண்டும். இதுமாதிரி தொடர்ந்து குறைந்தது 3 மாதங்களாவது பண்ண வேண்டும். அதுக்கு மேலயும் பண்றது உண்மையில் நல்லது தான். காரணம் இதுதான் :


மொட்டுகளை பூக்க வைப்பதற்காகவே எல்லா சத்துக்களும் போய்விடும், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்காது. ஆனால் நாம் இவ்வாறு செய்யும்போது சத்துக்கள் எல்லாம் பல கிளைகளை புதிதாக வளர செய்யும். அடி தண்டும் பலப்படும் . ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூக்கள் வரும்.