பசுமைவிடியல் அமைப்பை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளின் சந்திப்பு கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மிக இனிமையாக நடந்து முடிந்தது. இணையத்தின் மூலம் அறிமுகமாகி, ஒத்த கருத்தில் ஒன்றிணைந்து, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருந்த நாங்கள் அன்றுதான் நேரில் முதல்முறையாக சந்தித்தோம். ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு பெரிய மரத்தடியில் மண் வாசனையுடன் மீட்டிங் வைக்கலாம் என கேஆர்பி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கும் ஆனா இப்போ இங்க மழை காலமாக இருக்கிறது, ஏதாவது ஹால்னா பெட்டெர்'னு சொன்னதால் ஹால் என முடிவு செய்தோம்
மண்ணோட சம்பந்தப்பட்ட பசுமைவிடியலுக்கு ஹால்,பேனர்,மைக், ஸ்பீக்கர் இந்த மாதிரி எதுவும் தேவையில்லை என்பதே நிர்வாகிகள் எல்லோரின் விருப்பமாக இருந்தது. மண்டபம், உணவு அரேஞ்ச்மென்ட் எல்லாம் காஞ்சிபுரம் தன்னார்வலர் திரு.அருள் செய்திருந்தார்.
கலந்து கொண்டவர்கள்
சென்னையில்
இருந்து திரு.செல்வகுமார், திரு கேஆர்பி.செந்தில், திரு சிவகுமார் மற்றும் பெங்களூருவில் இருந்து திரு.பிரபு கிருஷ்ணா, திரு.சூர்ய பிரகாஷ், திருநெல்வேலியில் இருந்து திரு.ஜோதிராஜ், திருமதி கௌசல்யா கலந்து
கொண்டனர். மேலும் பசுமைவிடியலின் தன்னார்வலர்கள் காஞ்சிபல்லவன் கல்லூரிபேராசிரியர்திரு.சண்முகம்,திரு.அருள்,திரு.பூபாலன், திரு.ஜெய்சங்கர் திரு.மாதேஷ், திரு.செந்தில்,திரு.கணேஷ் , மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
காலையில் நிர்வாகிகளின் சந்திப்பு மிக இனிமையாக நகைச்சுவையுடன் சென்றது. பசுமைவிடியல் பற்றிய பேச்சுக்கு நடுவே கேஆர்பி அவரது சில அனுபவங்களை முக்கியமாக அவர் நடித்த குறும்படம் படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்தபோது சிரிப்பால் ஹால் அதிர்ந்தது. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் பேசக்கூடிய வெகு சில மனிதரில் ஒருவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்கள் என்றும் என் நினைவில்...!
திரு.சிவகுமார் , இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை அன்று இவரது பேச்சில் முழுமையாக வெளிப்பட்டது. சாதனை மனிதர் திரு.யோகநாதன் அவர்களை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். தனிநபராக பல ஏக்கர் நிலபரப்பில் ஒரு காட்டை உருவாக்கிய திரு.ஜாதவ் பயேங் பற்றியும் பேசப்பட்டது.
சில நிகழ்வுகள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-
பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.
(வெகு உற்சாகமாக...!!)
* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள் நடப்படுகிறது.
(ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது)
பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.
(வெகு உற்சாகமாக...!!)
* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள் நடப்படுகிறது.
(ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது)
* இரண்டாவதாக 'திடக் கழிவு மேலாண்மை திட்டம்' (குப்பைகள் மறுசுழற்சி)
குறித்த யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது. இதனை பல்வேறு கட்டமாக
படிப்படியாக செயல்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி
நிர்வாகிகள் கலந்து முடிவு செய்தார்கள்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது.
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.
முக்கிய துளிகள்
திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த முறை 'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
(மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )
திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.
நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.
மன நிறைவு
கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால் அங்குள்ள பெரியவர்களை அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது. மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.
பிரியங்களுடன்
கௌசல்யா
பசுமைவிடியல்
* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது.
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.
முக்கிய துளிகள்
திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த முறை 'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
(மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )
திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.
நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.
மன நிறைவு
கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால் அங்குள்ள பெரியவர்களை அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது. மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.
பிரியங்களுடன்
கௌசல்யா
பசுமைவிடியல்



