முன் குறிப்பு:
ஒரு வழியா 50 பதிவை தாண்டியாச்சு...! இனி சதம் அடிப்பதை பற்றிதான் ஒரே கவலை...!! (அதுக்குனு ஒரு பதிவ மூணா பிரிச்சு போடும் குறுக்கு முயற்சி ஏதும் செய்றதா இல்லை, என்று உறுதி கூறுகிறேன்) நான் அரைசதம் அடித்ததை பெருமையுடன் வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்........, அல்வா கொடுக்கணும் என்றுதான் ஆசை...?! ஆனால் இருட்டு கடையில் ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். ரெடி பண்ணதும் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்போம் இந்த போஸ்ட் எழுதி முடிப்பதற்குள் வருகிறதா என்று.
தலைப்பை பற்றிய சிறு விளக்கம்
இதுவரை சில நல்ல விசயங்களைத்தான் எழுதி இருக்கிறேன் என்று திடமா நம்புகிறேன். இனியும் அப்பணி செவ்வனே தொடரும்...! நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிற விரும்பத்தகாத சில நிகழ்வுகளை கண்டனங்கள் என்ற தலைப்பில் பகிரலாம் என்று உள்ளேன். அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களை, அதை பற்றிய என் ஆதங்கங்களை இந்த தமிழ் கூறும் பதிவுலகத்திற்கு தெரிய படுத்த எண்ணுகிறேன். நான் எழுதும் கண்டனங்களுக்கு எதிர் பின்னூட்டம் வந்தாலும் அதை புன்னகையுடன் எதிர் கொள்வேன் (அப்படியாவது உங்களை யோசிக்க வைத்து இருக்கிறேனே...?! )
முதல் கண்டனம் - நைட்டீயா ? மேக்ஸ்சியா ?!
எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )
நைட்டி என்ற பெயருக்கே அவமானம்
அழகான , சௌகரியமான ஆடையை தயாரித்து அதற்கு நைட்டி என்று பெயரும் வைத்தவர்கள், இப்போது அது படும்பாட்டை நினைத்தால் நொந்து விடுவார்கள். பகலில் வெளியில் வேலைக்கு செல்பவர்களும் , வீட்டில் இடுப்பொடிய வேலை செய்கிற பெண்களும், இரவில் தூங்க போகும் போதாவது தங்களை கொஞ்சம் ரிலாக்சாக வைத்து கொள்வதற்காக, 6 முழ புடவையை மாற்றி சிம்பிளாக, தளர்வான இந்த உடையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கபட்டது. (ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வாக்கியம் ?!!) இரவில் போட வேண்டும் என்பதால் தான் நைட்டி என்றே பெயர் வைத்தார்கள்..!! ( என்னவொரு கண்டிபிடிப்பு... கிளாப்ஸ் ப்ளீஸ்)
நம்ம பெண்களும் தொடக்கத்தில் அப்படித்தான் பயன்படுத்தினார்கள் (இப்ப பாடு படுத்துறாங்க ) அப்புறம் போக போக பகலில் வீட்டில் அணிய தொடங்கினார்கள் . இந்த ஆண்களும் மனைவியிடம் மெதுவாக " நாம் தனியா இருக்கிறப்போ பரவாயில்லைடா , அம்மா, அப்பா இருக்கிறப்போ அவங்க முன்னாடி போகும்போது மட்டும் புடவையை மாத்திக்கோமா " என்று சொன்னார்கள். அப்புறம் புடவை மாத்த நேரம் இல்லை என்று மேலே அழகா ஒரு துப்பட்டா போட்டால் போதும் என்று ஆனது. அப்புறம் கேட்கணுமா நம்ம மாதர்குல மாணிக்கங்களை......? இதுதான் நமது தேசிய உடை என்று கோஷம் போடாத குறையாக வெளியிலும் போட்டுட்டு போக தொடங்கி விட்டார்கள்.
கொடுமையான விசயங்கள்
இங்கே உதாரணத்துக்கு இரண்டு விசயங்களை சொல்கிறேன். படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க நான் வருத்தபடுறது நியாயமா இல்லையா என்று ...?!
பெண்கள் முதலில் இந்த உடையுடன் வாசல் வரை வந்தார்கள், அப்புறம் வாசலை தாண்டினார்கள், அப்புறம் பக்கத்தில் இருக்கிற கடைதானே...!, இதுக்கு போய் புடவை மாத்தவா என்று போனார்கள்....?! அப்படியே பக்கத்தில் இருக்கிற கிளினிக் தானே.....??! என்று சென்றே விட்டார்கள்....?? (அதுவும் ஸ்கூட்டியில்..!!) . என்ன கொடுமைங்க இது ? (கிளினிக்கில் லேடி டாக்டர் கிட்ட வயிறு வலி என்று போனால் அவங்க எப்படி டெஸ்ட் பண்ணுவாங்க ...?!) ஓ.கே நான் கேட்கல விடுங்க ( யோசிக்கிறப்ப கஷ்டமா இருக்கு இல்ல? அப்ப நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்? )
இதை எல்லாம் விட 2000 ௦ பிள்ளைகள் வரை படித்து கொண்டு இருக்கிற பள்ளிகூடத்துக்கு தங்கள் குழந்தையை இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து விடுகிற பெண்களை நைட்டில பார்த்து பிரமிச்சு போயிட்டேன்...!! இந்த காட்சி வேற எங்கேயும் இல்லை படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருக்கிற நம்ம சிங்கார சென்னையில் தான்....!!? வாழ்க தமிழ் கலாசாரம்....!!
இரண்டாவது
சமீபத்தில் சென்னையில் எனது உறவினர் மகனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து எல்லோருமாக சேர்ந்து ஒரு 10௦ பெண்கள் புடை சூழ பயங்கர பந்தாவாக 2 காரில் சென்றோம். இதில் போகும்போது இந்த மைசூர் சில்க்குக்கு பதிலா காஞ்சிவரம் கட்டி இருக்கலாமே என்று பையனோட அம்மாவை குறை வேற ( கிண்டலாத்தான் ) சொல்லிட்டு இருந்தோம்.
நாங்கள் எங்க வந்திட்டு இருக்கிறோம் என்று பெண்ணோட அண்ணன் போன் செய்து கேட்டுட்டே இருந்தார். ( பெண்ணோட அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் பெண் அண்ணன் வீட்டில் இருந்து வேலைக்கு போயிட்டு இருந்தாள் ) இதை பார்த்த நான் வரவேற்ப்பு செம கிராண்டா இருக்கப்போகுது என்று பெருமை வேறு பட்டுக்கொண்டேன். 'அடடா பூ வாங்கலையே' என்று வழியில் பூ வாங்கி ஒன்றுபோல சூடி கொண்டோம்.
பெண் வீட்டை நெருங்கி விட்டோம் , பெண்ணோட அண்ணன் டிப்டாப்பா வாசலில் நின்று வரவேற்றார். நாங்கள் அப்படியே அசந்து உள்ள போனோம், அங்கே பெண்ணோட அண்ணி வந்து நின்னு வணக்கம் சொன்னதும் எல்லோரும் அப்படியே ஆடி போய்ட்டோம் ...??!! ( இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்...ம் .. ம் ) என்னத்த சொல்ல , அண்ணி தேசிய உடையில் (நைட்டி) இருக்காங்க...( அது கொஞ்சம் பளிச்சுன்னு இருந்தாலும் பரவாயில்ல , சாயம் போய், கசங்கி ஒரு மாதிரியா இருந்தது )
அதற்கு பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு பொண்ணு ( நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் ) கொண்டு வந்த காப்பிய குடிச்சிட்டு கிளம்பி வந்திட்டோம். எனக்கு மனசு கேட்காமல் பெண்ணோட அண்ணாகிட்ட கிளம்பும்போது தனியா 'ஏன் இப்படின்னு' கேட்டேவிட்டேன். அவரும் ரொம்ப கூலா அவங்க வேலைக்கு போறதால வீட்டில் இப்படித்தான் இருப்பாங்க , அவளுக்கு இதுதான் comfortable என்றார். (ஆனா புதுசா போன நமக்கு...?)
நம்ம பெண்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க..?? புதிதாக ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நாம எப்படி இருக்கணும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து விட்டதா? மற்றவர்களின் முகசுளிப்பை கூட அலட்சியபடுத்துவது ஏன்..?? எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது அற்புதமான தமிழ் பண்பாடு..? மேலை நாடும் பொறாமை படும் நமது விருந்தோம்பல் ஒழுங்கு இப்போது எங்கே...?
எங்கள் வசதிக்கு ஒரு ஆடை உடுத்த கூட எங்களுக்கு உரிமை இல்லையா ? என்ற அனாவசியமான விதண்டாவாதம் பேசுவது அநாகரீகம்... எது உரிமை ? மற்றவர்களின் முகசுளிப்புடன் கூடிய பார்வையில் வலம் வருவது தான் உங்கள் உரிமையா ? பெண்ணுரிமை என்பதின் உண்மையான அர்த்தம் தெரியாத அறிவிலிகள் தான் இங்கே இப்போது பெருகி கொண்டு இருக்கிறார்கள். நமக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது , அதை தாண்ட எண்ணுவதே தவறு என்னும் போது, தாண்டியவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது ...?? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
இந்த மாதிரி சுய சிந்தனை இல்லாதவர்களை எண்ணியே எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....
**************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்
தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
***************
**************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்
தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
ஹேமா
Jayadeva
Jey
இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
***************


