கடந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி தோழி ஆசியா உமர் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கு முதலில் எனது நன்றிகள். இந்த மாதிரி தொடர் பதிவுகள் எழுத சொல்லி அழைப்பு வந்தால் கொஞ்சம் தயக்கம் வரும் சரியா எழுதி விடுவோமா என்று. இப்பவும் அந்த தயக்கத்துடன் தான் எழுதி இருக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க.
2010 இல் நடந்த இனிமையான நிகழ்வுகள் பல அதில் மிக முக்கியமா இங்கே சொல்ல விரும்புவது பதிவுலகத்திற்கு நான் வந்தது தான்.
அறிமுகம்
இந்த மாதிரி ஒரு உலகம் இருக்கிறது என்றே முதலில் எனக்கு தெரியாது...!? தொழில் ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக என்னை ஆசுவாச படுத்திக்கொள்ள ஒரு space தேவைப்பட்ட நேரத்தில் என் கணவர் தான் ப்ளாக் எழுத சொல்லி யோசனை சொன்னார். அதற்கு முன் வரை இணையம் என்பது புதிதாக ரீலீஸ் ஆகும் படங்களை நோகாமல் பார்ப்பதற்கு தான் பயன்பட்டுவந்தது...! எனக்கு என்ன தெரியும், என்னால் எழுத முடியுமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது...! 'என்கிட்டே புலம்புறதை எல்லாம் எழுது அதுவே போதும்', என்று உற்சாகம் கொடுத்தது என் கணவர்தான்...?!!
2010 இல் நல்ல நிகழ்வுகள்,பிடித்த நல்ல விஷயம்
2009 டிசம்பரில் ப்ளாக் தொடங்கினாலும் சரியாக எழுத ஆரம்பித்தது 2010 மார்ச்சில் இருந்து தான். முதலில் மனம் என்று தான் டைட்டில் வைத்தேன்...அப்புறம் தான் அதில் ஏதோ மிஸ்ஸிங் என்று தோன்றியது அப்புறம் தான் 'மனதோடு மட்டும்' என்றானது, கவிதைகளும் இதில் எழுதி வந்தேன்...கவிதைகள் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானது தான் 'வாசல்'
'மனதோடு மட்டும்' தளத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு தொடர் என்றால் தாம்பத்தியம் என்று சொல்வேன். இந்த தொடர் எழுத முக்கிய காரணம் சில பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் தடுமாறும் பிள்ளைகளின் நிலையை பற்றிய வருத்தம் தான். இந்த தொடரில் எழுதப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் நான் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த சில அனுபவங்கள் தான்.
மறக்க முடியாத சம்பவம்
அப்புறம் சில விழிப்புணர்வு பதிவுகள் விரும்பி எழுதினேன், இனியும் நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 'கண்டனம்' என்ற தலைப்பில் எழுதிய சில பதிவுகள் விமர்சனதிற்கு உட்பட்டன. அதிலும் முக்கியமாக நான் எழுதிய ஆபத்தான கலாச்சாரம் என்ற பதிவுக்கு எதிர் பதிவு எழுதும் அளவிற்கு சென்றது நான் எதிர்பார்க்காத ஒன்று. அதற்கு பின் பல காரசாரமான விவாதங்கள், மோதல்கள் என்று மூன்று வாரத்திற்கு பதிவுலகம் இதை பற்றியே பேசும் அளவிற்கு போய்விட்டதுதான் ஆச்சரியம். அதிலும் பல பதிவர்களும் லிவிங் டுகெதர் என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதி தங்களின் கருத்துகளை,ஆதங்கங்களை, கோபங்களை வெளிபடுத்தி இருந்தனர். அதன் மூலம் பல நல்ல கருத்துக்கள் வெளி கொணரப்பட்டன என்பதே உண்மை.
மற்றொரு பதிவு 'பெண் பதிவர்கள் என்பவர்கள் கேலி பொருளா ?' ஒரு குழுமத்தில் பெண் பதிவர்களை கேலி செய்து போடபட்டதிற்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவு. எனது பதிவில் பலரும் தங்களது கண்டனத்தை அந்த தளத்திற்கு எதிராக தெரிவித்திருந்ததின் பலனாக சம்பந்த பட்ட குழுமத்தில் இருந்த அந்த கேலி சித்திரம் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக பதிவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்.
மற்றும் நான் எழுதிய 'மரங்களை வெட்டுங்கள்' என்ற ஒரு பதிவு சூறாவளிபோல் பல இடங்களையும் சுற்றி வந்தது. பல பதிவர்களுக்கும் பலரால் மெயிலின் மூலம் இந்த பதிவு சென்றதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் பலரும் என் பதிவை அப்படியே அவர்கள் பெயரில் வெளியிட்டு இருப்பதை பார்த்தேன் . இதில் ஒரு ரசிக்க தகுந்த ஒன்றையும் பார்த்தேன், ஒரு குழுமத்தில் இந்த பதிவு வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த பதிவை எழுதி இருக்கிறார் என்று இருந்தது. எப்படியோ ஒரு விழிப்புணர்வு பதிவு பலரையும் சென்று அடைந்திருப்பதை பார்க்கும் போது பதிவுலகம் முயன்றால் நல்ல விதைகளை விதைத்தால் அது நிச்சயம் பலன் தரும் என்பதை எனக்கு உணர்த்தியது.
பெரிய சந்தோசம்
ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருகிறது இந்த பதிவுலகம்...பல நட்புகள் கிடைத்தன. ஆண் பெண் நட்பு கத்தியில் நடப்பதை போன்றது என்பார்கள் ஆனால் இங்கே எனக்கு கிடைத்த நட்புகள் மிக உன்னதமானவை தங்களது எல்லை எது என்பதை உணர்ந்த நாகரிகமானவர்கள். அன்பான தோழிகள், சகோதரர்கள் என்று எனது உறவுகள் எனக்கு உற்சாகத்தையும் வாழ்க்கையின் மேல் இன்னும் அதிக பிடிப்பையும் கொடுத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
பிடித்த நல்ல மனிதர்கள்
நண்பர்களில் முக்கியமானவராக ஒருவரை சொல்லவேண்டும் என்றால் தேவா என்று சொல்வேன். அவரது எழுத்துகளின் ரசிகை, தொடரும் அவர் பதிவுகளின் தீவிர வாசகி, அவரது எழுத்துகள் எனக்கு படிப்பினையை கொடுக்கிறது என்பதே உண்மை. (நல்ல தமிழை கற்றுக்கொள்ள அவரது பதிவை தொடர்ந்து படிக்கலாம்) அப்புறம் கே ஆர் பி செந்தில் , நர்சிம், ஈரோடு கதிர், பா.ராஜாராமன், இராமசாமி,பத்மஹரி,ஆதிரன்(மகேந்திரன்),அப்பாதுரை ,வானம்பாடிகள் பாலா, எஸ்.கே,விஜய், எஸ்.வி ,யோவ் ,ராமலக்ஷ்மி,தேனம்மை, பத்மா ,முத்துலட்சுமி ,மனோ சாமிநாதன் இவங்க எழுத்துக்கள் மிக பிடிக்கும்.
எனது உடன் பிறக்காத சகோதரர்கள் சௌந்தர்,கணேஷ். அப்புறம் சித்ரா, ஹேமா, ஆசியா,வானதி, ஆனந்தி,தெய்வசுகந்தி, அப்பாவி தங்கமணி,ஜலீலா கமால்,இந்திரா, நிலாமதி, சசிகுமார், LK , பாலாஜி, பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி, r.கோபி,அன்பரசன் மேலும் பலர் இருக்கிறார்கள் சொல்வதற்கு இங்கே இடம் கொள்ளாத அளவிற்கு...! இத்தகைய உறவுகளை கொடுத்த இந்த ஆண்டிற்கு (2010 ) நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.
எனது உடன் பிறக்காத சகோதரர்கள் சௌந்தர்,கணேஷ். அப்புறம் சித்ரா, ஹேமா, ஆசியா,வானதி, ஆனந்தி,தெய்வசுகந்தி, அப்பாவி தங்கமணி,ஜலீலா கமால்,இந்திரா, நிலாமதி, சசிகுமார், LK , பாலாஜி, பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி, r.கோபி,அன்பரசன் மேலும் பலர் இருக்கிறார்கள் சொல்வதற்கு இங்கே இடம் கொள்ளாத அளவிற்கு...! இத்தகைய உறவுகளை கொடுத்த இந்த ஆண்டிற்கு (2010 ) நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.
இன்னும் சாதிக்க வேண்டியவை என்று சொல்லணும் என்றால் இந்த நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதவேண்டும், இந்த பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்ற பெருமை கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும், முக்கியமாக பதிவுலகம் விட்டு செல்லும் போது மனதில் ஒரு நிறைவுடன் விடை பெறணும் என்பதே !
சொந்த வாழ்வில் சாதிக்க விரும்பும் எண்ணங்கள் என்றால் சில லட்சியங்கள் இருக்கிறது பொதுவாழ்வில் குறிப்பா சமூக சேவையில் ஈடுபடனும் என்ற எண்ணம் நிறைவேற இப்போது முயற்சி எடுத்திட்டு வருகிறேன்.....அது நிறைவேறனும் என்பதே புது வருடத்தின் எனது முதல் முக்கியமான பிராத்தனை.
என் டைரியே !
உனக்கு என் மேல் மிகுந்த கோபம்
உன் பக்கங்கள் அதிக சுமையாகி விட்டது என்று !
உன் மேனி முழுவதும் பல நினைவுகள்
எழுத்துக்களாய் இன்பச் சுமைகளாய் !
என் மனச் சுமையை குறைக்கிறேன் என்று
புரிந்து கொள்ளேன் நீ !!
புரிந்து கொள்ளேன் நீ !!
இந்த தொடரை தொடர மத்தவங்கள அழைக்கணும் என்பது விதிமுறையாம்...?!! எல்லோரையும் அழைத்து யோசிக்க வைக்கணும் என்று ஒரு ஆசைதான். ஆனா பத்து பேரை மட்டும் தான் என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டு இவங்களை முன் மொழிகிறேன்......
சௌந்தர்
கணேஷ்
பாலாஜி சரவணன்
இம்சை அரசன் பாபு
செல்வா
வெறும்பய
ஆனந்தி (அன்புடன் ஆனந்தி)
ஹேமா
காயத்ரி (கவிநா)
தெய்வசுகந்தி
மேலும் தொடரை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்




