திருமணம் என்ற பந்தம் வேறுபட்ட கலாச்சாரம், சூழ்நிலையில் வளர்ந்த இருவரை இணைத்து வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வைக்கிறது. இந்த பயணத்தில் பல மேடு, பள்ளங்கள் இருந்தாலும் அதை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு பரஸ்பர அன்பு அவசியப்படுகிறது. அந்த அன்பு சட்ரென்று வரவழைக்கக் கூடிய மந்திர செயல் அல்ல. மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பும் அழகிய ரோஜா மலரைப் போன்றது. எங்கள் இருவருக்கும் இடையிலும் அன்பு ஒரே நாளில் வந்துவிடவில்லை, பூ மலருவதே தெரியாத மாதிரி மலர்ந்த அந்த அன்பு தான் இன்று வரை மணம் பரப்பி கொண்டிருக்கிறது.
முதல் நாள்
திருமணத்திற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து நடந்தது.....! சென்னையில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றாலச் சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும் எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்துக்கொண்டு அவர் கடிச்சித் துப்பிய தமிழை ரசிச்சிட்டு இருந்தது நல்ல காமெடியாக இருந்தது.
திருமணத்திற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து நடந்தது.....! சென்னையில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றாலச் சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும் எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்துக்கொண்டு அவர் கடிச்சித் துப்பிய தமிழை ரசிச்சிட்டு இருந்தது நல்ல காமெடியாக இருந்தது.
ஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும் திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடக்கூடாது...??!) முழிச்சிட்டு இருந்தோம். அப்ப சினிமாவில் பார்த்த மாதிரியான ஒரு கெட்டப்பில் பின்னால் சிலர் புடைச் சூழ வெள்ளையும் வேஷ்டியுமாய் நாட்டாமை ஒருவர் வந்தார். அதுவரை ஸ்லோமோஷனில் நடந்துக் கொண்டிருந்த எல்லோரும் என்னவோ ஏதோ என்று ஓடுவதை பாவம்போலப் பார்த்திக்கிட்டு இருந்தேன்.
பெரியவர்கள் அனைவரும் முன்னாடி உள்ள ஹாலில் போய் அமர தொடங்கினர். நான் இரு அறைகள் தள்ளி இருந்தேன். இருபது பேர் வட்டமாக அமர்ந்து மும்முரமாக எதைப் பற்றியோ விவாதித்து கொண்டு இருந்தார்கள். அங்கே என்ன பேசுகிறார்கள் என்று என் தம்பி அடிக்கடி வந்து நேரடி ஒலிபரப்பு செய்துக் கொண்டிருந்தான். திடீரென்று சத்தமாக ஒரு குரல் (வேற யாரு நாட்டாமை தான்...! ) "தாய் மாமா எங்கப்பா ?? ", இதோ வந்திட்டேன் என்று என் அம்மாவின் அண்ணன் குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். ஊரில் (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருந்து அப்போது தான் வந்திருக்கிறார் (அது எப்படி சரியான நேரம் உள்ளே என்ட்டர் ஆனார்... ஆச்சரியம்....??!! )
சம்பிரதாய பேச்சுகள் எல்லாம் ( ஒரு மணி நேரமாவா....??!!) நடந்து முடிந்து என்னை அழைத்தார்கள். என்னை அழைத்து வந்த அக்கா (பெரியம்மா மகள்) என் காதில் அப்ப அப்ப மெதுவா ரன்னிங் கமெண்டரி சொல்லிட்டே வந்தாங்க. தலையை குனி...... மெதுவா நட.... எல்லோருக்கும் பொதுவா ஒரு வணக்கம் சொல்.....!! சரி என்று வணக்கம் சொன்னதும் ஒரு தட்டை கொடுத்தார்கள். "சீக்கிரமா 5 நிமிசத்தில இந்த புடவையை மாத்தி பொண்ணைக் கூட்டிட்டு வாங்க (ஒரு மணி நேரம் பேசினப்ப தெரியலையா...நான் டிரஸ் மாத்த மட்டும் வெறும் 5 நிமிஷமா...? நாட்டாமை தனியா மாட்டின நீ தொலைஞ்ச...) ஒரு வழியாக பத்து நிமிசத்தில் மறுபடி அழைத்து வரப்பட்டேன்.
அப்ப நாட்டாமை என்னை பார்த்து ஒரு லுக் விட்டார் பாருங்கள் நடிகர் திலகம் மாதிரி...நானும் ஒண்ணும் புரியாம அன்பா ஒரு சிரிப்பு சிரிச்சேன்....?! "தாயீ எல்லார் கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க" (இதுக்கு தான் அந்த லுக்கா...?!) நானும் சரி ஆசிர்வாதம் தானே என்று புடவையை நல்லா இடுப்பில் ஒரு சொருகு சொருக்கிட்டு விழ தயார் ஆனேன். முதலில் சாஷ்டாங்கமா அம்மா, அப்பா அப்புறம்.... மெதுவா திரும்பி பார்த்தா, ஒரு இருபது பேருக்கு மேல வரிசை கட்டி நிக்கிறாங்க....?! இது என்னடா சோதனை என்று பரிதாபமாக அம்மாவை தேடினா ஆள் எஸ்கேப் (ஏற்கனவே தெரியும் போல ...!!?)
அந்த நேரம் பார்த்து என் சின்ன தம்பி கீழ விழுந்து வணங்கிட்டு இருந்த என்னை மெதுவா தூக்கி விட்டான். அடடா ! அம்மா கைவிட்டாலும் தம்பி இருக்கிறானே (தம்பி உடையாள் இந்த படைக்கு அஞ்சாள் !) அப்படின்ற மகிழ்ச்சியில் வேகமா அடுத்த காலில் விழுந்தேன். விழுந்து எழுந்ததும் என் கையில் பணம் கொடுத்தாங்க 'அட இது வேறயா..?!'என்று சந்தோசமாக வாங்கினேன்...'அக்கா என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிக்கிறேனு' என்கிட்டே இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டான்..அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! (ரொம்ப அப்பாவியா இருக்கமோ!?) ம்...தொடக்கத்தில் இருந்த வேகம் மெதுவா குறைஞ்சு ஒரு மாதிரி ஆகிட்டேன்.'வராண்டாவிலும் நிறைய பேர் இருக்காங்க தாயீ இங்க வா' என்று அதே வெண்கல குரல் அடப்பாவிகளா உங்க கொடுமைக்கு அளவே இல்லையா என்று மனசுக்குள் நொந்துக் கிட்டே மெதுவா அங்கயும் போய் விழுந்தேன் இல்லை ஆசிர்வாதம் வாங்கினேன்...!!
இனி முடியாது சாமிகளா என்று ஒரு சேரில் போய் அப்படியே உட்கார்ந்துட்டேன்...அப்ப திடீரென்று வாசலில் கட்டி இருக்கிற ஸ்பீக்கரில் இருந்து மைக்கேல் ஜாக்சன் குரல் ( அட பாட்டு தாங்க )அப்படியே என் சோர்வு எல்லாம் என்னை விட்டு பறந்தது போல் ஒரு உணர்வு....! ஆனா இந்த பாட்டு இங்க எப்படி சாத்தியம்...?!எல்லாம் என் அண்ணனின் நண்பர்களின் கைங்கரியம்...என் மூடை மாத்ரான்கலாம். (அட தேவுடா ! பயங்கரமா யோசிச்சி 007 நம்பர் செட் பண்ணி இருந்த என் சூட்கேசை எப்படி தொறந்தாங்க...அதுல நான் வச்சிருந்த காசெட் தான் இது !) புதுசா இப்ப இந்த குழப்பம் வேற...!
" யாருலே அது புரியாத பாட்டைப் போடுறது ??" நாட்டாமை. இந்த நாட்டாமை எனக்கு தாத்தா முறையாம். சரியா போச்சு...!(இது தெரியாம மனசுக்குள்ள ரொம்ப திட்டிடோமோ...?!)
நாளை கல்யாணம்....ஆனா இன்றே சோர்ந்துப் போய்விட்டேன்...'எப்படி இருக்கும் அந்த திருமணம்' என்ற புது குழப்பத்துடன் நடு இரவை தாண்டி பின் அப்படியே தூங்கிப் போனேன்..
விடிந்தது பொழுது.....(அப்படின்னு சொல்லி எழுப்பினாங்க.....?!)
என் கணவர் ஊரில் திருமணம், ஒரு தேவாலயத்தில் நடந்தது. வெகு சிறப்பாக நடந்தது என்று தான் சொல்லணும், ஏன்னா அவ்வளவு கூட்டம். அந்த கூட்டத்தைப் பார்த்து எனக்கு பெருமை பிடிப்படல. அப்புறம் தான் தெரிந்தது அன்னைக்கு மட்டும் அந்த சர்ச்சில ஆறு கல்யாணமாம்...?!(ம்...அது தெரியாம பெருமைப் பட்டுட்டேனே...!)ஒரு வழியாக திருமணம் முடிந்து சர்ச் விட்டு வெளியே வந்தோம்.
அப்போது அங்கே பெரிய கூட்டத்தின் நடுவே பேண்டு வாத்தியங்கள், டிரம்ஸ் அடிச்சிட்டு இருந்தாங்க. அப்ப என் கூட நடந்து வந்துட்டு இருந்த என் அண்ணனிடம் "நல்லா அடிக்கிராங்கல்ல... கொஞ்சம் நின்னு கேட்டுட்டு போலாமே" என்றேன். "அட லூஸ், இது உன் கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏற்பாடு,எல்லாம் வீடியோவில் இருக்கும், அப்போ பார்த்துக்கோ" என்றான். (என்னவோ என்னை கேட்டுத்தான் புக் பண்ணின மாதிரி இவன் என்னை லூஸ் என்கிறான்...!டேய் அண்ணா,சமயம் கிடைக்கட்டும் அப்ப இருக்கு உனக்கு, ஏற்கனவே பழைய பாக்கி வேற ஒன்னு இருக்கு...!? மாப்பிள்ளை பிடிக்கலை சொல்வான்னு, போய் பார்த்திட்டுவானு இவனை நான் அனுப்பி வச்சா, போய் பார்த்திட்டு வந்து 'இதை விட நல்ல சாய்ஸ் உனக்கு கிடைக்காது'ன்னு பல்டி அடிச்சவன் ஆச்சே இவன்...!)
ஊர்வலம் சும்மா சொல்லக்கூடாது முன்னாடி நாலு காரு, பின்னாடி வேற வரிசையா நிறைய கார்கள், திரும்பித் திரும்பி பார்த்து ரசிச்சிட்டே வந்தேன். மறுபடியும் எனக்கு பெருமை தாங்கல மனசுக்குள் சிரிச்சிட்டே இருந்தேன்! ஆனா அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கல...?! டிரைவர் கிட்ட என்னவர் 'இந்த ரோட்ல எப்பவும் டிராபிக் தான்' வருகிற வண்டி எல்லாம் நம்மள பாலோ பண்ணற மாதிரியே இருக்குனு கிண்டல் பண்ணி ஒரே சிரிப்பு. (அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா ?!)
( நன்றி 'பல்போ பல்பு' இம்சைஅரசன் பாபு)
( நன்றி 'பல்போ பல்பு' இம்சைஅரசன் பாபு)
கொஞ்ச தூரம் கடந்ததும் ஒரே டமால் டுமீல்னு பயங்கர சத்தம்...!?
பதிவு பெரிதாகி விட்டதால் மீதி அடுத்தப் பதிவில் தொடரும்...
ப்ரியங்களுடன்
கௌசல்யா




