பதிவுலகில் சில நேரம் எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்களை பற்றிய சிந்தனையுடன் எழுதப்பட்டிருந்தால் 'நல்ல விழிப்புணர்வு பதிவு' என்றும் பின்னூட்டங்கள் வரும். விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தமும், புரிதலும் இல்லாமலேயே கருத்துக்கள் சொல்வதை 'ஏன் சரி செய்து கொள்ள கூடாது...?' என்பதே என் ஆதங்கம். குறிப்பாக இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.
விழிப்புணர்வு
தெரியாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒன்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும் , பெற வேண்டிய உரிமைகளை பெற்று கொள்ளாமலும், தம்மை பற்றியே உணராமலும் இருப்பதில் இருந்து, தூக்கத்தில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பது போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பது தான் விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தம். ஒருவர் தனது பிரச்சனைகளில் இருந்து 'தானாகவே விழிப்புணர்வு அடையவும் முடியும்', மற்றவர்கள் மூலம் 'விழிப்புணர்வு' ஏற்படுத்தவும் முடியும்.
ஒரு சில பதிவர்கள் அந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவில் நல்ல பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் அவை சரியாக பலரிடமும் சென்று சேருவது இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு சென்று யாரும் பார்ப்பதும் இல்லை , படிப்பதும் இல்லை, அப்படியே படித்தாலும் தங்களது கருத்துக்களை அங்கே பதிவு செய்வதும் இல்லை, அதனை பற்றிய தங்களின் சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்புவதும் இல்லை. அதை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கட்டுரை எழுதுங்கள் என்று மட்டும் குரல் ஆங்காங்கே எழுப்பபடுகிறது. சொல்வதுடன் நிற்காமல் செயலில் இறங்கி இன்னும் பல நல்ல பதிவுகள் வர நாம் தூண்டுகோலாய் நாம் இருக்கலாமே இனியாவது......!!
உதாரணத்திற்கு ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!
மேல்மட்ட மக்கள் இதற்காக counselling என்ற பேரில் மருத்துவரை நாட தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு எய்டஸ் என்பதை பற்றி கூட பெயரளவில் தான் தெரிகிறது. பள்ளிகூடங்களில் ' செக்ஸ் கல்வி ' அவசியம் என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கியபோதிலும் அது வேண்டாம் என்று மறுக்கும் பெற்றோர்கள் தான் பெருமளவில் இருக்கிறார்கள். செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை, ஆண், பெண் உடல் அமைப்பு, டீன் ஏஜ் பருவம், தவறான தொடுதல்கள் என்ன, கருத்தடை பற்றியவை, மனித பாலியல் நடத்தைகள் அதில் இருந்து மனரீதியான தெளிவு எப்படி பெறுவது என்பது போன்ற பல்வேறு வகை பற்றியும் சொல்லிகொடுப்பது ஆகும்.
நம் பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர் டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே' என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே, ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும் நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??
நம் பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர் டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே' என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே, ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும் நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??
(உதாரணதிற்கு ஒன்றை தான், இங்கே நான் குறிப்பிட்டேன்...இதை போல் பல விசயங்கள் உள்ளன விழிப்புணர்வை ஏற்படுத்த...அவற்றில் சில பதிவுகளை என் தளத்தில் இணைத்து இருக்கிறேன்...இன்னும் விடுபட்டவை நிறைய இருக்கிறது...தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் )
யார் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அளவில் பதிவு எழுதினாலும் ஆனா, பெண்ணா என்று பார்க்காமல் 'தேவையான நல்ல பதிவு' என்றால் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஏன் தயங்க வேண்டும் ?? நல்ல பதிவு எழுதினால் மட்டும் நல்ல பதிவர் என்று இருக்காமல் பிற நல்ல பதிவுகளையும் தேடிச் சென்று கருத்துகளை பதிவு செய்வதின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வை (மறைமுகமாக மட்டுமாவது) ஏற்படுத்த முடியும். அந்த பதிவை பற்றி வரும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம், நல்ல பதிவிற்கும் கொஞ்ச நேரத்தை செலவு செய்யுங்கள்.
"சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக இருக்கிறான், கேள்வி கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"
வேண்டுகோள்
ஒரு நாட்டிற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, பிற மீடியாகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் வலைபூக்களை படித்துதான் தங்களுடைய தாய்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறார்கள். இனி தொடரும் காலங்களில் பெரும்பாலோரின் பார்வையும் இணையத்தை குறிப்பாக வலைபூக்களை நோக்கித்தான் இருக்கும் என்பதே பலரின் அனுமானம். தொலைக்காட்சி, பேப்பரை பார்க்கும் நேரம் கூட இனி குறைந்து வலைபூக்களின் பக்கம் வருகை அதிகரிக்கும்...அப்படிப்பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருக்கிற பதிவர்களாகிய நாம் நமது பார்வையை கொஞ்சம் சரி செய்து கொள்வோமே...
பொழுது போக்கு என்று மட்டும் இல்லாமல் உண்மையில் ஏதாவது சமுதாய விழிப்புணர்வுடன் எழுதுவோம் என்று இருப்பவர்களை நாம் கண்டிப்பாக தேடி கண்டுபிடித்து உற்சாக படுத்த வேண்டும். ரோட்டில் இறங்கித்தான் புரட்சி செய்ய வேண்டும் என்று இல்லை.. இந்த மாதிரி சிறிய அளவிலான நல்ல பதிவுகளை பற்றிய விழிப்புணர்வையாவது பலரிடம் கொண்டு போய் சேர்ப்போமே..... அதனால் தேவையற்ற வீண் விவாதங்களை விடுத்து நல்ல நேர்மையான கருத்துகளை விவாதித்து நம்மை நாம் சீர் படுத்திகொள்வோம்.
செய்வீர்களா...??!!
ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்....
"படித்த பலரது பார்வையும், இப்போது பதிவுலகத்தை ஊன்றி கவனித்து கொண்டிருக்கிறது "
மற்றவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்....ஆனால் படித்து, விவரம் தெரிந்த , அறிவியல் விந்தையான இணையத்தை நுனி விரல்களில் கையாளுகிற நாம் ஏன் 'பத்தோடு பதினொன்னு' என்பது போல் இருக்கவேண்டும்....நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...
"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"
"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"