வியாழன், ஆகஸ்ட் 23

சென்னையில் 'பதிவர்கள் மாநாடு' ! நடக்கப்போவது என்ன...?!


தமிழ் பதிவுலகமே திரண்டு ஒரு விழாவை முன்னெடுக்கிறது. விழா குறித்த விவரங்கள் தொடர்ந்து பலரின் தளங்களில் வெளியிடபட்டு வருகின்றது. ஒவ்வொன்னையும் படிகிறபோது எனக்கு ஒரு வித படப்படப்பே  வந்துவிட்டது. எவ்ளோ பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள் எப்படி, என்னவெல்லாம் நடக்க போகிறதோ என ஒரே சிந்தனை. நெருங்கி வர இருக்கிற மகளின் திருமண நிகழ்வுக்காக பெற்றோர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்களோ அது போன்ற ஒரு நிலை. உண்மையில் இது எனக்கு ஆச்சர்யம். விழா ஏற்பாடுகளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, கலந்து கொள்ளவும் இயலாது என்கிறபோது என்ற எனக்குள் ஏன் இப்படி...!? ஒரே ஒரு காரணம் பதிவர்களில் நானும் ஒருவள்...!

சுலபமானது அல்ல 

ஒரு நாலு பேர் கலந்து கொள்ளும் நிகழ்வென்றாலும் அதற்காக எத்தனை மெனக்கிட வேண்டும் என்பது தெரியும். தவிர சந்திப்பு நல்ல படியாக நடக்க வேண்டும், நடந்து முடிந்த பின்னும் அதை குறித்த எதிர் விமர்சனங்கள் வந்தால் அதையும் சந்திக்க வேண்டும். இன்னும்,

எத்தனை சங்கடங்கள்...
எத்தனை சிரமங்கள்...
எத்தனை அவஸ்தைகள்...
எத்தனை கேள்விகள்...
எத்தனை பதில்கள்...
எத்தனை சமாளிப்புகள்...
இப்படி பல எத்தனைகள் !! 

அத்தனைகளையும் சரிகட்டி நடத்தி முடிப்பது என்பது லேசான காரியம் இல்லை. 'ஆமாம் என்ன பெரிய சந்திப்பு?' என்று சுலபமாக யாரும் பேசி விடலாம்...இப்படி அங்கலாய்க்க மட்டும் தான் தங்களுக்கு முடியும் என்பது தெரிந்தும்...!!  

நாங்களும் நடத்துவோம்ல மாநாடு

தமிழர்கள் இருவர் சந்தித்தால் ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்ற ஒரு நல்ல(?) பெயர் நமக்கு இருக்கிறது...அதை மாற்றிக்காட்டி கொண்டிருப்பவர்கள் தமிழ் பதிவர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிலர் விதிவிலக்கு, ஆனால் ஒரு குடும்பமாக கருத்துக்களை பரிமாறி, நிறைகுறைகளை விவாதித்து பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு மெல்ல நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் பதிவர்கள். அதனால் தான் பல வார, மாத  பத்திரிகைகள், தினசரிகள் இணையத்தில் வெளியிடப்படும் துணுக்குகள்,கட்டுரைகள், படங்கள், பதிவர்கள் பேட்டிகள் என வெளியிட்டு தங்கள் சர்க்குலேஷனை தக்கவைத்து கொண்டிருக்கின்றன.

இப்படி பட்ட பதிவுலகத்தினரின் மாநாடு என்றால் சும்மாவா...பதிவுலகத்தினர் தவிர பிறரின் பார்வையும் ஞாயிறன்று நடக்க போகும் மாநாட்டை நோக்கித்தான் இருக்கப்போகிறது. 

நடக்க போவது என்ன...? 

ஏற்கனவே இப்படி ஒரு மாநாட்டை நடத்தவேண்டும் என்ற பல முறை சிந்தித்து, பேசி இப்போது சாத்தியமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் கலந்தாலோசித்து சரியாக திட்டமிடப்பட்டு  செயல்படுத்தபடுகிறது என்பதை அது குறித்த பதிவுகளை படிக்கும் போது  தெரிகிறது. வெளியூர்களில் இருந்து வர இருக்கிறவர்களின் தங்கும் வசதிக்கான  ஏற்பாடுகள்  செய்து இருக்கிறார்கள்.விழாவில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என பார்ப்போம்.....

* கவியரங்கம் இருக்கிறது, இணையத்தில் கவிப்பாடி மயக்கியவர்கள் நேரில்...!! கண்டு ரசிக்க போகிறவர்கள் பாக்கியசாலிகள். 

 * மூத்த பதிவர்களுக்கு பாராட்டும், மரியாதை செய்வித்தலும் நடக்க இருக்கிறது.

*  இணையத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

 * அன்றைய தினம் ஸ்பெஷலாக டிஸ்கவரி புத்தக நிலையம் புத்தக கண்காட்சி நடத்த இருக்கிறது, பிரபலங்கள் எழுதிய புத்தகங்களை அரங்கிலேயே பெற்று கொள்ள வசதிகள் செய்யப்பட இருக்கிறதாம். வாங்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டாம்.

* சிறந்த பதிவர் ஒருவருக்கு லட்ச ரூபாய் வரை பரிசு கொடுக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் முக்கிய துளிகள். ஏற்பாடுகளை பார்க்கும் போது மாநாடு வெகு பிரமாண்டமாய் இருக்க போவதென்னவோ உண்மை. கண் எல்லாம் படாது அதுதான் திருஷ்டி ஏற்கனவே கழிஞ்சி போச்சே !! (சரியாதான் சொல்றேனா ?!) :)

(மாநாடுனா ஏதாவது தீர்மானம் போடுவாங்க, இங்க அப்படி ஏதும் உண்டா...?!) :)

களைக் கட்ட போகிறது !!

விழா வரும் ஞாயிறு(26/8/12) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. வெளியூர்களில் இருந்து செல்ல இயலவில்லை என்றாலும் சென்னையில் இருக்கும் 'இதுவரை சம்மதம் தெரிவிக்காதவர்கள்' இருந்தால் அவசியம் சென்று கலந்துக் கொள்ளுங்கள்...பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதை எல்லாம் இந்த நேரத்தில் புறந்தள்ளிவிட்டு தமிழர்கள் இணையும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வது நமது கடமை என எண்ணி செல்ல முயற்சி செய்யுங்கள். நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதங்கள் ஒருவேளை இருந்தாலும் இந்த ஒருநாளில் அதை எல்லாம் சற்று மறந்து ஒரே மனத்தினராய் பங்குபெறும்போது நம் மனதிற்கு அது உற்சாகத்தை  கொடுக்கும். நம்மை புதுபித்துகொள்ள ஒரு நாளாக நிச்சயம் அமையும் !!  அமையட்டும் !!



                                                                                                                                   
கலந்துகொள்ள போகும் பதிவர்கள் பெயர் விபரங்கள் :
இறுதி பட்டியல் 
சி. பி. செந்தில்குமார், ஈரோடு
சங்கவி, கோவை 
நண்டு@நொரண்டு, ஈரோடு
சுரேஷ், கோவை
பரமேஷ், ஈரோடு
கோவி, கோவை
ஜீவா, கோவை 
கோவை சரளா, கோவை 
சீனா அய்யா, மதுரை 
ரமணி, மதுரை 
சௌந்தர்திருவள்ளூர்
கருண், திருவள்ளூர்
ரஹீம்கசாலி, அரசர்குளம்
பிரகதீஸ், பெரியகுளம்
கதிரவன், சேலம் 
ரேகா ராகவன், சென்னை 
கேபிள் சங்கர், சென்னை
உண்மைத்தமிழன், சென்னை 
சசிகுமார், சென்னை 
சிவக்குமார், சென்னை 
பிரபாக்கரன் சென்னை
மோகன்குமார், சென்னை 
ரிஷவன், சென்னை 
டி. என். முரளிதரன் சென்னை 
வே. நடன சபாபதி, சென்னை 
சீனு, சென்னை 
இக்பால் செல்வன், சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுத்தீன், சென்னை 
செல்வின், சென்னை 
சென்னை பித்தன், சென்னை 
புலவர் சா. இராமானுசம், சென்னை
பால கணேஷ், சென்னை
சசிகலா, சென்னை
மதிமதி, சென்னை
ஸ்ரவாணி, சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்சென்னை39. கணக்காயர்,சென்னை
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை

லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை

காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை

மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)

 குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை

கார்க்கி(சாளரம்) சென்னை  

விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை

 மென்பொருள்பிரபு,சென்னை

 அமைதி அப்பா,சென்னை

 ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளைசென்னை

 சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை

 கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை

 ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை64. மாடசாமி(வானவில்)சென்னை

 இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை

அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை

 சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்

நிலவு நண்பன்,திருநெல்வேலி69. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்

நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி

 தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை

 கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை

 திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்

 சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
 மணவை தேவாதிராஜன்,மணப்பாறை83. சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர

 ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்

பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்

 லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை

 தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

 சைதை அஜீஸ்,துபாய்

 மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய். சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்  இரா.தெ.முத்து(திசைச்சொல்) ,சென்னை

. ரமேஷ் (சிரிப்பு போலீஸ் ) சென்னை. அகிலா(கோயம்புத்தூர்
மூத்த பதிவர்கள்
 லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 

 ரேகாராகவன்,சென்னை 

 வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை

சீனா ஐயா(வலைச்சரம்)மதுரைரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை

சென்னை பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை
கவியரங்கில் பங்குபெறுவோர்
சசிகலா(தென்றல்)சென்னைமாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்  
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னைசௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்அரசன்(கரைசேரா அலை)அரியலூர்மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறைரிஷ்வன்,சென்னை
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை

நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் கொடுக்காமல் இருந்தாலோ உடனடியாக  கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகணேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301

மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

பெயர் பட்டியல் நன்றி - திரு சென்னைபித்தன்  அவர்கள்.

                                                         * * * * * * * * * * * * * * * *

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்  படுத்துங்கள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! விழாவினை மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா வெற்றி பெற  என் வாழ்த்துக்கள்...! 

                                                           வெல்க தமிழ் !
                                                              


பிரியங்களுடன் 
கௌசல்யா  



 

செவ்வாய், ஆகஸ்ட் 21

எத்தனை ஆச்சர்யங்கள் !! மரங்களும் நம் முன்னோர்களும்...!


மரம் வெட்டாதே என்று எத்தனை சட்டங்கள், கட்டுபாடுகள்  போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.  வெப்பமயமாதல் குறித்து உலகம் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்க்கிறோம், வளர்க்கச்  சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் மரத்தை நடுவது முக்கியம் அல்ல...முதலில் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுக்காக்க வேண்டும். ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், ஆனால் சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்...!!

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் கருதியதுடன் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி இணையத்தில் படித்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. என் ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


சங்கப்பாடல்களில் பல அரிய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன...
அவற்றில் சில மட்டும் இங்கே...

* நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அந்த இடத்தில் விவசாயம் செய்பவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி அல்ல, இது குறித்து கொஞ்சம் யோசி" என தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க, 'மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல்' என்பதை என்னவென்று சொல்ல...

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இதை போன்று மற்றொரு பாடல்,

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை  (திணைமாலை நூ.ஐ.61 )

இன்றைய அவசர யுகத்தில் சக மனிதனை எந்த அளவு சொல்லாலும் , செயலாலும் துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்ள சிறிதும் அஞ்சாமல் இருக்கிறோம். ஆனால் மரம், செடி கொடிகளை சக உயிராக எண்ணி அதனுடன் பேசுவதும் உரையாடுவதும், செல்லக் கோபப்படுவதும், கொஞ்சி விளையாடுவதும் என இருந்ததை பற்றி பாடல்களில் படிக்கும் போது பழந்தமிழர்களை எண்ணி பெருமைபடாமல் இருக்க இயலவில்லை.

ஒரு பாடலில் மரங்களுக்கு உயிர் இருக்கிறதாக குறிப்பிடுவதாக இருக்கும், 

உடன்போக்குச்சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கொங்க மரத்தைப் பார்த்து "நீயும் ஒரு தாய், குலைகளை  ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழிக்காட்டு " (திணைமாலை 150-65) என்கிறாள்.

பேசும் சக்தி இல்லாத மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வு உண்டு, மனம் உண்டு அதனால் கூர்மையான முள் போன்ற விரலினால் அவள் சென்ற வழிக் காட்டு என கேட்கிறாள்.

அறியாமை என்பது இல்லை

இயற்கையை தங்களில் ஒரு பகுதியாக எண்ணி பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது எவ்வாறு இருக்கும் என நம்மை கேட்கிறது (ஐந்திணை ஐம்பது.8)  " நாடா கொன்றோ காடா கொன்றோ...எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே "

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

குடிநீரை பற்றிய அக்கறை 

இன்றைக்கு குடிநீரை பற்றி பெரிய அளவில் பேசிக்கொண்டு வருகிறோம். காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறோம்.ஆனால் அக்காலத்திலேயே நீரை காய்ச்சி பருகவேண்டும் என்று " குடிநீர் அட்டு உண்ணும்"(382) பழக்கத்தை அறிவுறுத்தியும்,வெயில் காலத்தில் புது மண் பானையை பயன்படுத்த வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோம் 

பலவிதமான சோப்,ஷாம்பூகளை உபயோகித்து குளித்து, துணி துவைத்து என ஆற்றுநீர் மாசுபட மக்களும் ஒரு காரணம். 'துறை இருந்து ஆடை கழுவுதல்  இன்னா' (இன்னா நாற்பது 23) , 'பொது இடத்தில் துப்பகூடாது' என்பதை ஆசாரக் கோவை 'இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்' என்றும் சாப்பிடும் முன், பின் 'வாய் கழுவுதல் அவசியம்' என்றும், வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகிருமிகள் கண்களை பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதை ' கண்ணெச்சில் கண்நூட்டார்' (ஆசாரக்கோவை 41)

இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதின் சிறப்பு பற்றி நாலடியார், 'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்'(244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது தான் சிறந்த முறை என்கிறது (வயிற்றை கெடுக்கும் கார்பைட் கல் நினைவுக்கு வருகிறது)

ஆழிபேரலை

சுனாமி வந்தப்போது முதல்முறையா புதுசா வந்த மாதிரி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்...ஆனால்  நம் பண்டைய வரலாறுகளை சரியாக படித்திருந்தோமென்றால்  சுனாமி என்பதை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு இருந்திருக்கும்...

மாத்தளை சோமு என்பவர் தனது புத்தகமான 'வியக்கவைக்கும் தமிழகம்' என்பதில் தமிழ்நாட்டை 7 ஆழிபேரலைகள் தாக்கி உள்ளதை குறிபிடுகிறார். சங்ககாலத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களை விற்றூற்று மூதெயினனார் (குறுந்தொகை 372) எழுதியுள்ளார்.'கடுவளி' என்றழைக்கப்பட்ட பேய்க்காற்று பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்றுவிடும் ஆற்றலுடையது. இப்படி வீசி எறியப்பட்ட  மடல்கள் வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில் காய்ந்து கொண்டிருக்கும்... இக்காற்றினால் கடற்கரை மணலானது வெகுதொலைவிற்கு மேலேஎழும்பி பின் வீசியடிக்கப்படும்.அவ்வாறு வீசியெறியப்பட்ட மணலானது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும். இக்காட்சியை அயிர் சேற்று அருவி என்று குறிப்பிடுகிறார் (குறுந்தொகை 372)

பாதிப்பை பலமுறை சந்தித்துள்ள தமிழர்கள் அதற்கான தீர்வுகளை இயற்கையே வழங்கி இருப்பதையும் அறிந்து வைத்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்படாத அளவில் ஊர்களை வடிவமைத்துள்ளனர்...சங்க இலக்கியங்களில் அத்தகைய ஊர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன... முக்கியமாக மூன்று கடல்கள் சூழப்பட்டுள்ள தென் பகுதியே பாதிக்கப்படும் என்பதை அறிந்தே இப்ப பகுதிகளில் தாழை  மரங்களை வளர்த்து வந்துள்ளனர்.


(வேதிப்பெயர் - pandanus odoratissimus இம்மரத்தின் சிறப்பை பற்றி தனிப் பதிவு எழுதணும், அவ்ளோ விஷயம் இருக்கிறது)
  
கண்டல் மரங்களும் தாழை மரங்களும் கடலோர பகுதியில் தடுப்பணை போல இருந்து வந்துள்ளன...நம் முன்னோர்களும் இதை அறிந்து வளர்த்து வந்துள்ளனர் என்று எண்ணும்போது என் பிரமிப்பு இன்னும் அதிகமாகிறது...

ஆனால் முன்னோர்கள் சொல்லி சென்றவைகளை எல்லாம் விட்டுவிட்டு மந்திரத்துல மாங்காயப்பழுக்க வச்சிடலாம்னு விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிட்டு வானத்தை பார்த்துட்டு   இருக்கிறோம் !!

சுனாமியால் பாதிக்கபட வாய்ப்பில்லாத ஒரு ஊர் இருந்ததாம்...அதன் பெயர் கண்டவாயில் (கண்டல்வேலி)

"புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்
கண்டல் வேலிய ஊர்" (நற்.74.7)

இவ்வூரைச் சுற்றி உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்கள் இருக்கும்,  இதன் கடற்கரை முற்றிய பனைமரங்கள் மணல்மேட்டில் முள்வேலி இட்டது போல சூழப்பட்டிருக்கும்.


பனைமரங்கள், ஞாழல், தாழை, புன்னைமரங்கள் போன்றவை கடற்கரைகளை சுற்றி அடர்ந்த வேலிபோல் அமைந்து சுனாமி பேரலைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும். இப்படி பட்ட மரங்களால் சூழப்பட்ட சோலைகளை நாட்டு வேலி, பெருநீர்வேலி,கண்டல்வேலி என பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இதை பார்க்கும் புலவர்க்கு மதில்கள் சூழ்ந்த அரண்மனை கோட்டையை போல தோன்றுகிறதாம்.

அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடுகளிறே போல் " (கலி.135.3-5)

பேரலைகள் - போர்யானைகள்
அரண்மனை கோட்டைகள் - கண்டல் சோலைகள்

மோதுற அலைகளோட கதி??

"பெருநீர்க்கள் பொறு சிறுனுரை மெல்ல மெல்ல இல்லாகுமே" (குறுந் 290.4-6)

இந்த சோலைகளில் மோதியதும் அவை சிறுநுரையை போல சிதறி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதாம்...

இது கற்பனையாக எழுதப்பட்ட வரிகள் அல்ல பேரலை சிறு நுரையாக மாற தாழையின் மடங்கிய தன்மைதான் காரணம் என்றும் தெளிவாக சொல்லி இருக்காங்க.

வணங்கிய  தாழை " (அகம்.128.1-2) என்ற பாடலில் காக்கும் கடல், அருள் மறந்து அழிக்க முற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலே  இயலும் என்று கூறுகிறது.

திரைமுதிர் அரிய தடந்தாட் தாழை (அகம்.131.3-5)

புன்னை,  தாழை இரண்டும் உறுதியானவை, பேரலைகளுக்கும் தாக்கு பிடிக்கக்கூடியவை. கடற்கரையோரங்களிலும், ஆற்றின் கரையோரங்களிலும் வளர்த்து வந்துள்ளனர். பரிபாடல் (12-6) இவற்றை கண்டிப்பாக வளர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது.

என்ன தெரியும் இன்றைய மக்களுக்கு...?!

கடல் போன்ற சங்க பாடல்களில் மரங்களை குறித்து ஒரு துளி மட்டும் இங்கே சொல்லி இருக்கிறேன்...எத்தனை ஆச்சர்யங்கள் நம் முன்னோர்களிடம்...அவர்கள் வழி வந்த நாம் வழி மறந்து, முன்னோர்கள் சொன்னதையும்  மறந்துவிட்டோம். அவர்கள் வளர்த்து வணங்கி பராமரித்து வந்த மரங்களை, காடுகளை அழித்து சிதைத்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருக்கிறோம்...அவர்கள் செய்தவை எல்லாம் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின்  நல்வாழ்வை எண்ணி...ஆனால் நாமோ நாம் பெற்ற குழந்தைகளுக்கு கூட(?) நல்லதை விட்டு செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.

இருக்கும் மரங்களை வெட்டி வீடு கட்டி, அதன் பின்னர் மரக்கன்று நடுகிறோம்...வேடிக்கையாக இல்லையா !? இயற்கை கைகொட்டி சிரிக்கும் இந்த வேடிக்கை மனிதர்களை பார்த்து !!

"மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை !  
மரத்தை வெட்டாதே மனிதா, நீ அழிந்து போவாய் !!"         -  இயற்கை


                                                            SAVE TREES...! 
                                                                                       PLEASE !!


                                                                           * * * * * * *



படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், ஆகஸ்ட் 6

முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !!



முகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில்  ஒன்றை பற்றியதே இந்த பதிவு.

முக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க  யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன் வந்து விழும்...இப்படி ஏகப்பட்டதுகள் சேர்ந்து அதுல நம்ம பிரண்ட்ஸ் கொடுத்த கமெண்ட்ஸ் பத்தி எங்க இருக்குனு கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி தேடனும்...என்னை(?) கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா(!) மிரட்டியும் பார்த்தாச்சு...யாரும் கேட்கிறதா இல்ல...

இந்த மாதிரியான நிலையில (கற்போம்) பிரபு ஒருநாள் 'அக்கா இந்த குரூப்ல சேருங்க'னு ஒரு லிங்க் அனுப்பினான்...'என்னடா இது சோதனை' சரி தம்பி சொல்றானேன்னு போய் பார்த்தேன்...'கேட்டால் கிடைக்கும்' னு தலைப்பு இருந்துச்சு...ஆயிரக்கணக்குல மெம்பெர்ஸ் இருந்தாங்க...ஆன்லைன் ஷாப்பிங் போலனு  தோணிச்சு...என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சம் படிச்சு பார்த்தேன்...

அடடா...!! எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது? என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...!!  

'கேட்டால் கிடைக்கும்' அப்படினா ??

தலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...!!

தங்களை பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்கள்...

"சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்னைகளை தட்டிக்கேட்டுப் பழகுவோம். அப்போதுதான் ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்...!"

இந்த குழுமம் ஆரம்பித்து (31 july 2011) ஒரு வருடம் ஆகிறது...இதுவரை 1,495 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்...தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்...திரு கேபிள்சங்கர் அவர்களும் திரு சுரேகா அவர்களும் இணைந்து இதை ஆரம்பித்து இருக்கிறார்கள்...திட்டமிடல் கூட்டம் ஒன்றும் வைக்கிறார்கள் அதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டங்களை வரைமுறைப் படுத்திக்கலாம். வீதியில் இறங்கி உதவி செய்ய இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை என்பதை அங்கே பகிரப்படும் செய்திகளை வைத்து புரிந்து கொள்ளமுடியும்...

அரசு குழாய்ல தண்ணி வரலையா?, வாங்கின பொருளின் தரம் குறைவா  இருக்கா ? கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா? அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா ?அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா ?இன்னும் நிறைய...  இப்படி பல பல சிக்கல்கள்/பிரச்சனைகள்  எதாக இருந்தாலும் இங்கே பகிரலாம்...ஒன்றை பகிர்ந்ததும் ஆளாளுக்கு ஓடி வந்து உதவுறாங்க...ஆலோசனை சொல்றாங்க...பிரமிப்பாக இருக்கிறது...!! 

உறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத்  தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே !!

இத்தகைய சிறந்த ஒரு குழுமத்தை பற்றி என்னிடம் கூறி என்னை அதில் சேர சொன்ன  பிரபுவுக்கு என் நன்றிகள்.

திரு சுரேகா அவர்களின் தளத்தில் இருந்து அவர்களின் அனுமதியுடன் இங்கே அப்பதிவு வெளியிடபடுகிறது...படித்து பாருங்கள்...

'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...

நல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...!!
                                                             
                                                ASK...YOU WILL GET IT !!

**************************************************************************
திரு சுரேகா அவர்களின் பதிவு
----------------------------------------------

கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.

Dear All,


I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a single class until May 15. I decided to quit after asking for a class for multiple times and everytime I get the same response saying it'll be scheduled from next week (And it never was). So, I quit (saying that my brother is getting maried and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May, they say like the refund will be processed by the month end and initially they said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said the old employees were transferred and a new guy has taken care. He said that the refund has been processed and I'll get the money today (29th June). When I called today, they said the same story - month end process and you'll get that by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly belive that the money will be ready by July 4 or 6 - they'll have another excuse for that anyway. Can someone help me getting this process a little faster? I tried sending a feedback via the NIIT site, but after submitting the feedback, "The page cannot be displayed" Error comes up! My Student ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.



NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்க விரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26,000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6,000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.

நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,

'எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம்' என்றார்.

நான் உடனே..

'ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க!' என்றேன்.

'இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே…' என்றார்.

'நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க!' என்றேன்.

'அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார்' என்று மீண்டும் சொன்னார்.

நான் ஆரம்பித்தேன்.

பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா?' என்றேன்.

'என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ்' என்றார். 

'அப்போ, என்ஐஐடி-க்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை' என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.

'நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார்' என்றார்.

பிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து 'இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம்' என்றேன்.

நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார்.
‘சார்! நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி' என்றார்.

நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

                          கேட்டால் கிடைக்கும்.!
************************************************************************
பின்குறிப்பு:

குழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...

நன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்
http://www.surekaa.com/2012/07/blog-post_31.html 



படம் - கூகுள்  

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...