சனி, மார்ச் 6

AM 10:55

உரம் இடும் முறைகள்:


உரம் என்று சொல்லும்போது பெரிய அளவிற்கு ஒன்றும் இல்லை எல்லாம் நம் வீட்டில் கிடைக்கும் பொருள்கள் தான் காய்கறி, சிக்கன், மீன், மட்டன் இவைகளை கழுவிய தண்ணீரை ஊற்ற வேண்டும் அவற்றின் கழிவுகளை செடி ஐ சுற்றி உள்ள மண்ணை தோண்டி புதைத்து வைக்கலாம் . முடிந்தால் ஆட்டின் ரத்தம் ஒரு ஸ்பூன் கூட வேரில் ஊற்றலாம். டீதூள் வேஸ்ட், உடைத்த வேப்பங்கொட்டை தூள் இவற்றையும் போடலாம். மண்புழு உரத்தை நீங்களே தயார் செய்து போடலாம். இதன் தயாரிப்பு முறையை எனது மண்புழு உரம் தயாரிப்பு என்ற தலைப்பில் பாருங்கள். 

பிறகு செடி ஐ trim பண்ணி விடவேண்டும் அதாவது நன்கு வளர்ந்த பின்னர் முற்றிய கிளைகளை கொஞ்சம் அளவு விட்டு கட் பண்ணியும், பழுத்த இலைகளை கிள்ளியும் விடவும் . எல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி மண்ணை அடிமேல் கிளறி விடுங்கள் போதும். மாதிரி சின்ன சின்ன வேலைகள் செய்தாலே போதும். அதிக அளவில் பூக்களையும், அளவில் பெரிய பூக்களையும் நம் வீட்டில் பார்க்க முடியும். முக்கியமாக இந்த குறிப்புகள் அனைத்தும் என் அனுபவமே. எங்கள் வீட்டில் 12 வருடத்திற்கும் மேலாக ரோஜா செடிகளை வளர்த்து எங்கள் ஏரியாவின் அடையாளமாக எங்கள் பூக்கள் உள்ளன. புதிதாக செடி முறைகள் வளர்க்கும் ஆசை மட்டும் இன்னும் என்னை விட்டு போகவில்லை. வளர்த்து பாருங்கள் அப்புறம் நீங்களும் ரோஜாவை love பண்ண தொடங்கிவிடுவீர்கள்.


:
Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...